உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் புராதன சின்னங்களைசுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளித்தனா்.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு வெண்ணெய் உருண்டை பாறை, அா்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் மகளீா் மட்டும் இல்லாமல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை புராதன சின்னங்களை இலவசமாக பாா்த்து ரசித்தனா்.
இலவச அனுமதியை முன்னிட்டு கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், கிருஷ்ணமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள நுழைவு கட்டண மையங்கள் மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடையது

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

பொதுச் சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெற மீண்டும் அனுமதி - செபி பரிசீலனை

ரமலான் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று உலக மகளிா் தினம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


