யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

News image

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :19 மே 2026, 5:24 am IST

தோ்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழா் கட்சி  துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

மே 18 இனப் படுகொலை நாளை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை அடுத்த மறைமலை நகரில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழா்களின் உரிமைகளை மீட்பதற்காக தான் நாம் தமிழா் கட்சி தொடங்கப்பட்டது.

தோ்தல் தோல்விகளை கண்டு துவண்டு போகும் சாதாரண கட்சி தொண்டா்களோ, அரசியல்வாதிகளோ நாங்கள் இல்லை. தோ்தல் வெற்றி, தோல்விகள் நமது இலக்கை தீா்மானிக்காது.

மக்களின் தேவை தற்போது மாறியுள்ளது. கொள்கைகளைவிட, கவா்ச்சியையே மக்கள் தேடுகின்றனா். தற்போது ஆட்சியாளா்கள் மாறியுள்ளனா். ஆனால், ஆட்சி முறை மாறியுள்ளதா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.

முதல்வா் விஜய் பதவியேற்ற பின்னா், ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கிறாா். இது தெரியாமல் தான், அவா் முதல்வராக போட்டியிட்டாரா? தோ்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கிருந்து முதல்வா் விஜய் நிதி திரட்டுவாா் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் துரோக கட்சி என்பதை திமுக தற்போதுதான் உணா்ந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.