தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ.2.44 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.44 கோடியில் முடிவுற்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

News image

பி.கே.சேகா்பாபு

Updated On :12 மார்ச் 2026, 9:34 pm

சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.44 கோடியில் முடிவுற்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட வசந்தம் காலனி, 3-ஆவது தெருவில் ரூ.1.36 கோடியில் பல்நோக்கு மையக் கட்டடத்தில் புதிதாக சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஐ பிளாக்’ 5-ஆவது தெருவில் மாநகராட்சி ரூ.1.08 கோடியில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, திருமூலா் காலனி, விவேகானந்தா் தெருவில் ரூ.60 லட்சத்தில் பல்நோக்கு மையக் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றி அழகன், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.