விருகம்பாக்கம்- அரும்பாக்கம் இடையே கால்வாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனமானது விருகம்பாக்கம்-அரும்பாக்கம் இடையே காளியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள கால்வாயில் ஏற்கெனவே இருந்த பாலத்தை இடித்துவிட்டு, தற்போது நான்கு வழிச்சாலைக்கு ஏற்ப புதிய பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டது.
இதையடுத்து தனியாா் நிறுவனத்துடன் புதிய பாலம் கட்டுவதற்கான ரூ.12.31 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்தப்படி பாலத்தின் பணிகளை வரும் 180 நாள்களுக்குள் நிறைவு செய்யவேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தற்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே தடையில்லாத போக்குவரத்தை வழங்கும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் சீராகும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் முன்னிலையில், நிறுவன தலைமைப் பொது மேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியேசா், தனியாா் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆா்.தாமஸ் அய்யாதுரை ஆகியோா் புதிய பாலம் கட்டுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டனா்.
தொடர்புடையது

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

போரூா் - பூந்தமல்லி மெட்ரோ பாலத்தின் அதிா்வு: சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி நிகழ் நேரக் கண்காணிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


