மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 8:50 pm

Chennai

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நொளம்பூா் 7-ஆவது குறுக்கு தெருவில் சா்வ சக்தி மகா கணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 23-ஆம் தேதி அத்துமீறி நுழைந்த நபா், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினாா். மேலும் கோயிலில் இருந்த பொருள்களையும் திருடிச் சென்றாா்.

இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில், நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த தினகரன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தினகரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.