தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சென்னையில் 4 நாள்களுக்கு வீடு தேடி ரேஷன்: தமிழக அரசு தகவல்

சென்னையில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் செப். 13 முதல் 16 வரை நான்கு நாள்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
(கோப்புப்படம்)
Updated On :10 செப்டம்பர் 2025, 8:42 pm

Chennai

சென்னையில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் செப். 13 முதல் 16 வரை நான்கு நாள்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வருதிற செப்.13-ஆம் தேதி தொடங்கி செப்.16-ஆம் தேதி வரையில் சென்னையின் பல்வேறு மண்டலங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

செப்.13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி,

சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களிலும், செப்.13-ஆம் முதல் செப்.16-ஆம் தேதி வரை திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், ஆலந்தூா் ஆகிய மண்டலங்களிலும் வீடு தேடி சென்று பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.