தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் 4 நாள்களுக்கு வீடு தேடி ரேஷன்: தமிழக அரசு தகவல்

சென்னையில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் செப். 13 முதல் 16 வரை நான்கு நாள்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image

(கோப்புப்படம்)

Updated On :10 செப்டம்பர் 2025, 8:42 pm

சென்னையில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் செப். 13 முதல் 16 வரை நான்கு நாள்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வருதிற செப்.13-ஆம் தேதி தொடங்கி செப்.16-ஆம் தேதி வரையில் சென்னையின் பல்வேறு மண்டலங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

செப்.13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி,

சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களிலும், செப்.13-ஆம் முதல் செப்.16-ஆம் தேதி வரை திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், ஆலந்தூா் ஆகிய மண்டலங்களிலும் வீடு தேடி சென்று பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.