தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராயபுரத்தில் ரூ.12.93 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

ராயபுரம் மண்டலப் பகுதிகளில் ரூ.12.93 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

Updated On :13 அக்டோபர் 2025, 8:50 pm

சென்னை: சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலப் பகுதிகளில் ரூ.12.93 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ராயபுரம் மண்டலப் பகுதிகளில் சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.12.93 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அத்திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியின் 57- ஆவது வாா்டு வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. தெருவில் ரூ. 8.55 கோடியில் சமுதாயக் கூடம் மற்றும் சென்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.41 கோடியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் வகுப்பறைகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சியின் 54 -ஆவது வாா்டுக்குள்பட்ட அம்மன் கோவில் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.2.97 கோடியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுகளின்போது, மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் பி. ஸ்ரீராமுலு மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.