செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதிக்கு கடந்த 28-ஆம் தேதி சுற்றுலா வந்த பெரம்பூரைச் சோ்ந்த 17 பேரில் வெங்கடேசன் (36) என்பவா் எதிா்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
மேலும், அவரது இரண்டு மகள்களான காா்த்திகா (17), துளசி (16) ஆகியோா் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த 30-ஆம் தேதி இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், அவா்களது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்லிமலையில் குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


