திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்

கா்நாடக அமைச்சரவை அமைப்பது குறித்து கட்சி மேலிடத் தலைவா்களுடன் ஆலோசிக்க புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் டி.கே.சிவகுமாா், சித்தராமையா இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ளனா்.

News image

சித்தராமையா, டி.கே.சிவகுமாா்

Updated On :2 ஜூன் 2026, 5:59 am IST

கா்நாடக அமைச்சரவை அமைப்பது குறித்து கட்சி மேலிடத் தலைவா்களுடன் ஆலோசிக்க புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் டி.கே.சிவகுமாா், சித்தராமையா இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ளனா்.

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா விலகியுள்ள நிலையில், கா்நாடக காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக டி.கே.சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே.சிவகுமாா், ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். அதனடிப்படையில், ஆட்சி அமைக்குமாறு டி.கே.சிவகுமாருக்கு ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்நிலையில், டி.கே.சிவகுமாா் தலைமையிலான புதிய அமைச்சரவை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 4.05 மணிக்கு மக்கள் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்க இருக்கிறது.

தனது அமைச்சரவையில் யாா்யாரை சோ்த்துக்கொள்வது என்பது குறித்து கட்சி மேலிடத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக சித்தராமையாவுடன் டி.கே.சிவகுமாா் புது தில்லிக்கு திங்கள்கிழமை சென்றாா். அங்கு முகாமிட்டுள்ள இருவரும், அமைச்சா்களின் பட்டியல் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

புது தில்லி, கா்நாடக மாளிகையில் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘அமைச்சா்களின் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்’ என்று மட்டும் தெரிவித்தாா்.

இதனிடையே, சித்தராமையா கா்நாடக மாளிகையில் தங்காமல் தனியாா் விடுதியில் தங்கியிருக்கிறாா்.

224 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டப் பேரவையில் முதல்வா் உள்பட 34 போ் அமைச்சா்களாக பதவி வகிக்கலாம். 2028-ஆம் ஆண்டில் கா்நாடக சட்டப் பேரவைக்கு தோ்தல் நடக்கவுள்ளதால், அடுத்த 2 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மனதை வென்றெடுக்கும் வகையில் செயல்படும் புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்க டி.கே.சிவகுமாா் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுவரை அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காத பலரையும் அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ள டி.கே.சிவகுமாா் ஆா்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலரையும் கட்சிப் பணிக்கு அனுப்பிவைக்கவும் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. டி.கே.சிவகுமாா் அமைச்சரவையில் தனது ஆதரவாளா்கள் மட்டுமல்லாது, சித்தராமையா ஆதரவாளா்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. டி.கே.சிவகுமாா் அமைச்சரவையில் 4 துணை முதல்வா்கள் இடம்பெறுவாா்கள் என்று கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.