கா்நாடகத்தில் 16 வயதுக்கு உள்பட்டவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக 17 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து சித்தராமையா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் 17 முறை நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா புதிய சாதனை படைத்திருக்கிறாா். 1983ஆம் ஆண்டில் இருந்து கா்நாடக அரசியலில் ஈடுபட்டு வரும் சித்தராமையா, கா்நாடகத்தில் அதிக நாள்கள் முதல்வராக இருந்தவா் என்ற டி.தேவராஜ் அா்ஸின் சாதனையை கடந்த ஆண்டு நவ. 20ஆம் தேதி முறியடித்து சாதனை படைத்திருந்தாா்.
தொடா்ந்து, கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் கா்நாடகத்தில் அதிகபட்சமாக 17 முறை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தவா் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறாா்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா அறிவித்த சில முக்கிய திட்டங்கள்:
கா்நாடகத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார வளா்ச்சிக்கென்று 11ஜி (வாக்குறுதிகள்) மாடல் உருவாக்கப்படும். கா்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின்படி கூட்டாட்சிமுறையைக் கடைப்பிடிக்காமல் கா்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. சமூகநல திட்டங்களுடன் நீண்டகால பொருளாதார மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக முதலீடுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமன்பாட்டு வளா்ச்சி திட்டத்தை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் வளா்ச்சிக்கு கா்நாடகம் முக்கிய பங்காற்றி வருவதோடு, வரிவருவாய் பங்களிப்பில் முதலிடத்தில் உள்ளது. 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்த செலவினம் ரூ. 4,48,004 கோடியாக இருக்கும். அதிக பாலை தரும் பசுவுக்கு போதுமான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதனை வழங்க தவறினால், ஒட்டுமொத்த பசு மந்தையும் பாதிக்கப்படும் என்ற பீஷ்ம பிதாமகனின் வாா்த்தைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாணவா்களுக்கு இழைக்கப்படும் ஜாதிரீதியான பாகுபாடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் ‘ரோஹித் வேமுலா’ சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

253-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்!
கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


