ஒருகாலத்தில் பெங்களூர், மும்பையில் மட்டும்தான் ஒழுங்காக மீட்டர் இயக்குவாங்க. ஆட்டோ ஓட்டுநர்களும் நாகரிகமாக, நேர்மையாக நடந்துகொள்வர். 25 பைசா மிச்சத்தைக்கூட ஆட்டோக்காரர்கள் கொடுத்த காலம் இருந்தது. இப்போது குறைந்தப்பட்சக் கட்டணம் ரூ.17 என்று இருந்தும், மீட்டருக்கு அதிகமாக காசு கொடுன்னு கேட்பது சென்னையை போல பெங்களூரும் மாறுகிறதோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மீட்டருக்கு சூடு வைப்பது, மீட்டரை இயக்காமல் பணம் கேட்பது, பயணிகளிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவது... இதெல்லாம் பெங்களூர் ஆட்டோக்காரர்களிடம் புதுசா வந்திருக்கிற பழக்கம்.