இதுபற்றி இதன் ஒருங்கிணைப்பாளர் இரா. சீனிவாசன், தினமணி நிருபரிடம் கூறுகையில், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் நீண்டநாள் கனவு இதன் மூலம் நிறைவேற தொடங்கியுள்ளது. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கன்னடத்தில் கொண்டுவர தமிழ்ச் சங்கம் நீண்டகால திட்டம் வகுத்துள்ளது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகையில் 2341 பாடல்கள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாட்டில் 3552 பாடல்கள் அடங்கிய மொத்தம் 33,500 வரிகளை தமிழில் இருந்து கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்யவிருக்கிறோம். இப்பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்.