பள்ளி இறுதித் தேர்வில் சம்ஸ்கிருதம், இந்தி தாள்களுக்கு தாராளமாக மதிப்பெண் தருவதால், சில தமிழ் பெற்றோர்கள் மதிப்பெண்களுக்காக தங்கள் குழந்தைகள் தமிழ் படிப்பதை தவிர்த்திருக்கிறார்கள். இதனாலும் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. படிப்பதற்கு மாணவர்கள் இல்லாததால், உயர்நிலைப்பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரியில் தலா 7 தமிழாசியர்கள் பணியாற்றிய நிலைமாறி, இன்று உயர்நிலைப்பள்ளியில் முத்துசுப்ரமணியம் மற்றும் பி.யூ.கல்லூரியில் பத்மா என்ற இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். மீதமுள்ள தமிழாசிரியர் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ளன.