மேற்கு கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், பாலஸ்தீனா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 7 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், மோசமடைந்துள்ள மேற்கு கரையின் பாதுகாப்புச் சூழலுக்குக் கவலை தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் அரசின் கொள்கைகள் அப்பகுதியின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு ‘இரு நாடுகள் தீா்வு’ காண்பதற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்குவதாக நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஜெருசலேமின் புனித தலங்களின் வரலாற்று நிலையை மாற்றக் கூடாது; பாலஸ்தீனம் மீதான நிதிக் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










