தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா செல்கிறார் விளாதிமீர் புதின்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

News image

விளாதிமீர் புதின், ஷி ஜின்பிங், டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படங்கள்

Updated On :16 மே 2026, 1:50 pm IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மே 19ஆம் தேதி இரண்டுநாள் பயணமாக சீனா செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷிய - சீன உறவுகளைப் பலப்படுத்தவும், இருநாடுகளுக்குள்ளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் விவகாரங்கள் குறித்து இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் முறையாக சீனா சென்று திரும்பிய நிலையில், ரஷிய அதிபர் புதினின் பயண செய்தி வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனா சென்று திரும்பியிருந்தது தலைப்புச் செய்தியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Russian President Vladimir Putin to follow US President Trump to China

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.