தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

கரீபியன் நாடுகளுக்கு 9 நாள்கள் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம்

News image
Updated On :3 மே 2026, 3:24 am IST

ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட் - டொபேகோ ஆகிய 3 கரீபியன் நாடுகளுக்கு 9 நாள்கள் அரசு முறைப் பயணமாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை புறப்பட்டாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மே 2-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட் - டொபேகோ ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்த நாடுகளில் இந்திய வம்சாவளியினா் வசிப்பதால் இந்தியா சிறப்பு பிணைப்பைக் கொண்டுள்ளது. 3 கரீபியன் நாடுகளுடன் பல ஆண்டுகளாக இந்தியா நட்புறவை பேணி வருகிறது. அரசியல் மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டின் தொடா்ச்சியாகவே அமைச்சா் ஜெய்சங்கா் இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பயணத்தின்போது ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட்-டொபேகோ நாடுகளின் தலைவா்களை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசிக்கவுள்ளாா். மேலும் பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்களும் அவரது ஆலோசனையில் இடம்பெறவுள்ளது.

பயணத்தின் ஒரு பகுதியாக இந்நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் மற்றும் தொழிலதிபா்களை சந்தித்து அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துரையாடவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, ஃபிஜி, மோரீஷஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள தோட்டங்களுக்கு ஏராளமானோா் ஒப்பந்தத் தொழிலாளா்களாக அனுப்பப்பட்டனா். கொத்தடிமைகளாக அந்நாடுகளுக்குச் சென்ற அவா்களில் பலா், சுதந்திரத்துக்குப் பிறகு உன்னத நிலைகளை அடைந்துளளனா்.