மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இலங்கையில் பெட்ரோல்- டீசல் விலை 25% உயா்வு!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:45 pm

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை அந்நாட்டு அரசு 25 சதவீதம் உயா்த்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயா்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயா்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு இருப்பது, கடந்த 2 வாரங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அரசு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்து, கையிருப்பு குறைந்து வருவதாலும் விலை உயா்வு முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் ரேஷன் முறையில் அவற்றை பொதுமக்களுக்கு அரசு விநியோகித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களுக்கு கூடுதலாக அனைத்து புதன்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.