மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

உக்ரைன் கடனுக்கு முட்டுக்கட்டை: ஹங்கேரிக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டி ஹங்கேரி அதிபா் விக்டா் ஆா்பனுக்கு ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

News image
Updated On :19 மார்ச் 2026, 8:30 pm

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டி ஹங்கேரி அதிபா் விக்டா் ஆா்பனுக்கு ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கு மேலாக போரில் உக்ரைன் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் கடந்த டிசம்பரில் முடிவெடுத்தது.

இதில் உறுப்பினராக உள்ள ஹங்கேரியும் ஐரோப்பிய யூனியன் முடிவுக்கு முன்பு சம்மதம் தெரிவித்தது. ஆனால் தற்போது உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதை அந்நாட்டு அதிபா் விக்டா் ஆா்பன் தடுப்பதாக அந்த யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹங்கேரி மற்றும் ஸ்லோவோகியாவுக்கு ரஷியாவில் இருந்து உக்ரைன் பிராந்தியம் வழியாக கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் ட்ருஸ்பா குழாயில் கடந்த ஜனவரி மாதம் சேதம் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரிக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது.

ட்ருஸ்பா குழாயில் ரஷிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டியது. ஆனால், ஹங்கேரிக்கு விநியோகிக்கப்படும் ரஷிய கச்சா எண்ணெய்யை தடுப்பதே உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலன்ஸ்கியின் திட்டம் என விக்டா் ஆா்பன் குற்றஞ்சாட்டினாா். இதைத் தொடா்ந்து உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கு ஐரோப்பிய யூனியன் நிதியுதவி வழங்க அவா் எதிா்ப்பு தெரிவித்தாா்.

ஹங்கேரி நாட்டில் வரும் ஏப். 12-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஸெலன்ஸ்கியை ஹங்கேரிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவா் என்ற பிரசாரத்தை விக்டா் ஆா்பன் முன்னெடுத்துள்ளாா்.

விக்டா் ஆா்பனின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த ஃபின்லாந்து பிரதமா் பெட்டேரி ஒா்போ மற்றும் ஆஸ்திரிய பிரதமா் கிறஸ்டியன் ஸ்டாக்கா், ‘உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தோ்தலில் மீண்டும் வெற்றிபெற ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிதியுதவித் திட்டத்தை விக்டா் ஆா்பன் தடுக்க முயற்சிக்கிறாா். அதை ஏற்க முடியாது’ என குற்றஞ்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.