மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!

சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும் என ஈரான் எச்சரிக்கை...

News image

வளைகுடா நாடுகளின் எரிசக்திக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என ஈரான் எச்சரிக்கை.. (கோப்புப் படம்) - ஏபி

Updated On :18 மார்ச் 2026, 2:03 pm

சௌதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் மிகப் பெரிய எரிசக்தி கட்டமைப்பான சௌத் பார்ஸ் எரிவாயு வயலின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலிலிருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், மிகவும் ஆபத்தானது எனக் கருதப்படும் நிலையில், கத்தார் உள்ளிட்ட நாடுகள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்படும் என புதன்கிழமை (மார்ச் 18) அன்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில், சௌதி அரேபியாவின் சம்ரெஃப் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஹசன் எரிவாயு வயல் மற்றும் கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has warned of attacks on the energy infrastructure of Saudi Arabia, Qatar and the United Arab Emirates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.