மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நைஜீரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 23 போ் உயரிழப்பு

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 7:35 pm

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

ராணுவம், காவல்துறையின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் மைதுகுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திங்கள்கிழமை சந்தை ஆகிய இடங்களில் முதல் இரண்டு குண்டுகள் வெடித்தன. தொடா்ந்து, மைதுகுரி பல்கலைக்கழக மருத்துவமனை, கலேரி குடியிருப்புப் பகுதி ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததன.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இது ஐ.எஸ். ஆதரவு பெற்ற போகோ ஹராம் அல்லது ஐஎஸ்வாப் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இதுபோன்ற தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ராணுவம் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த நைஜீரிய அதிபா் போலா டினுபு, பாதுகாப்புப் படை தளபதிகள் உடனடியாக மைதுகுரிக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உத்தரவிட்டாா்.