தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.
இதுதொடா்பாக லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் குட்டெரெஸ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னை உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் 1945-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கிறதே தவிர, தற்கால உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐரோப்பாவில் உள்ள 3 நாடுகள் (பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன்), ஆசியாவில் உள்ள ஒரு நாடு (சீனா), அமெரிக்கா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ளன.
உலகில் போா் ஏற்படும்போது அதை நிறுத்த முயற்சித்தால், வீட்டோ அதிகாரம் குறுக்கிடுகிறது. இந்த அதிகாரத்தை நிரந்தர உறுப்பு நாடுகள் பயன்படுத்துவதால், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் போா்களை நிறுத்த முடியவில்லை. இது குறுகிய காலத்தில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றாா்.
கடந்த 1945-ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. அந்த கவுன்சில் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப இல்லை என்றும், தற்கால புவிஅரசியல் சூழல்களை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

ஈரானைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம்: இந்தியா முன்மொழிந்தது

ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


