ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போரால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அதுவும் அடுத்த 30 நாள்கள் மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே கடலில் சிக்கித்தவிக்கும் எண்ணெய் விநியோகத்தை சீராக்கவும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக இந்த குறுகிய கால அனுமதி வழங்கப்படுவதாகவும் அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீதான கடுமையான வரிவிதிப்பால் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
US grants 30 day waiver to India for buying Russian oil stuck at sea amid Middle East war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதி

100 டாலரைத் தாண்டிய கச்சா எண்ணெய் விலை! இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



