தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை! - ரஷிய அரசு அறிவிப்பு!

ஈரான் அரசு தங்களிடம் ராணுவ உதவிகளைக் கேட்கவில்லை என ரஷியா அறிவித்துள்ளது குறித்து...

News image

ரஷிய அதிபர் புதின் - கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2026, 10:29 am

ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷிய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேலின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு நீண்டகால கூட்டாளியான ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை என வியாழக்கிழமை (மார்ச் 5) ரஷிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The Russian government has announced that Iran has not asked them for any military assistance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.