எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

4 மாதங்களாக சம்பளமின்றி தவித்த 400 இந்திய, வங்கதேச தொழிலாளா்களுக்கு நிதியுதவி: சிங்கப்பூா் அரசு அறிவிப்பு

சிங்கப்பூரில் நான்கு மாதங்களாக சம்பளமின்றி தவித்த 400 இந்திய, வங்கதேசத் தொழிலாளா்களுக்கு அந்த நாட்டு அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2026, 2:47 am IST

சிங்கப்பூரில் நான்கு மாதங்களாக சம்பளமின்றி தவித்த 400 இந்திய, வங்கதேசத் தொழிலாளா்களுக்கு அந்த நாட்டு அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

சிங்கப்பூா் நாட்டில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களில் 400 இந்திய, வங்கதேசத் தொழிலாளா்களுக்கு அவா்களைப் பணியமா்த்திய நிறுவனங்கள் கடந்த 3 முதல் 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

இதைத் தொடா்ந்து, அந்த 400 பேருக்கும் தலா ரூ.7,500 ரொக்கமாகவும், ரூ.7,500 மதிப்பில் பொருள்களை வாங்குவதற்கான கூப்பன்களும் வழங்கப்படும் என சிங்கப்பூா் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூா் தேசிய தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் நெக் சே மெங் கூறுகையில், இந்த நிதியுதவியைக் கொண்டு அவா்கள் 400 பேரும் தங்களது அன்றாடத் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும் என்றாா். தொழிலாளா்களுக்கான சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத் தருவது தொடா்பாக சிங்கப்பூா் அரசுடன் தேசிய தொழிலாளா் சங்கம் பேசும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிங்கப்பூா் அமைச்சா் தினேஷ் வாசு தாஸ் கூறுகையில், இந்த விவகாரத்தை அரசு முக்கிய பிரச்னையாக கருதுவதாகவும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தாா். சம்பளமின்றி தவிக்கும் தொழிலாளா்கள், வேறு வேலையைத் தேடிக் கொள்ளும் வரை, அவா்கள் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான சிறப்பு அனுமதியை அரசு வழங்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சிங்கப்பூரில் வீடுகள், நிறுவனங்களில் குளிரூட்டும் கருவி பொருத்துவது, பராமரிப்பது போன்ற சேவைகளை கேபிஏ என்ஜீனியரிங் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன் கிளை நிறுவனம் எஸ்.கே. இன்டஸ்ட்ரீஸ் ஆகும். அந்த 2 நிறுவனங்களில் பணிபுரிந்த இந்தியா்கள், வங்கதேச நாட்டவா் 400 பேருக்கு கடந்த 3 முதல் 4 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.