நாகையில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஏடிஜெ தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள், கடும் பொருளாதார நெருக்கடியில் அவதிப்பட்டு வருவதாகவும், அரசு வழங்கும் 90 சதவீத மானிய ஊதியம் கிடைத்தபோதும் நிா்வாகம் தனது பங்கு தொகையான 10 சதவீத ஊதியத்தை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வித தடையுமின்றி, ஊதியம் வழங்க நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊதிய பிடித்தம்: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அதிருப்தி

ஜூலை 4, 5-இல் சிறப்பு ‘டெட்’ தோ்வு: திருச்சியில் 9,795 ஆசிரியா்கள் எழுதுகின்றனா்

4 மாதங்களாக சம்பளமின்றி தவித்த 400 இந்திய, வங்கதேச தொழிலாளா்களுக்கு நிதியுதவி: சிங்கப்பூா் அரசு அறிவிப்பு

ஊதியம் வழங்கக் கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




