திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணம் 16% உயர்வு!

வங்கதேசத்தில் மின் கட்டணத்தை 16% உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

வங்கதேச தலைநகரில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் - AFP

Updated On :3 ஜூன் 2026, 7:08 pm IST

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணத்தை 16% உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 17 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாடு எரிபொருள் தேவைக்குப் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 9.04% ஆக இருந்த நிலையில், பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக மின் கட்டணத்தை 16% உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேற்கொண்டு அந்நாட்டு அரசு சுமையை ஏற்றியுள்ளது.

இரு நாள்களுக்கு முன் மண்எண்ணெய் விலை வங்கதேச ரூபாயில் 130-ல் இருந்து 135 டாகா ஆகவும், பெட்ரோல் விலை 135 இல் இருந்து 140 டாகா ஆகவும் உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மின் கட்டணத்தை 16% உயர்த்துவதாக வங்கதேச எரிபொருள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஜலால் அகமது அறிவித்துள்ளார்.

வங்கதேச அரசின் மின் மேம்பாட்டு வாரிய தகவலின்படி, மொத்த மின் உற்பத்தித் திறனில் இயற்கை எரிவாயுவிலிருந்து சுமார் 44%, நிலக்கரியிலிருந்து 24 %, எண்ணெய் மற்றும் டீசலிலிருந்து 24%-ம் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். வங்கதேசத்தின் முதல் அணு சக்தி உற்பத்தி நிலையமும் விரைவில் செயல்படத் தொடங்கும் நிலையில் உள்ளது.

கோடைக் காலத்தில் அதிகளவு மின் தேவை அதிகரிப்பதால் அங்குள்ள கிராமப்புறங்களில் அதிகளவு மின் தடை ஏற்பட்டன. ஆனால், தலைநகர் தாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்க உலக நாடுகளிடம் சுமார் 2 பில்லியன் டாலர் கடனைப் பெற வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.

Summary

Electricity tariffs in Bangladesh rise by 16% due to the West Asian war

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.