இதுதொடா்பாக டெக்சாஸ் மாகாண ஆளுநா் கிரேக் அபோட் வெளியிட்ட உத்தரவில், ‘ஹெச்-1 பி விசா தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அண்மையில் வெளியான தகவல்களாலும், அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கா்களுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையிலான அமெரிக்க மைய அரசின் திட்டத்தாலும், அனைத்து அரசு நிறுவனங்களும் புதிதாக ஹெச்-1 பி விசாக்களுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், ஹெச்-1பி விசா பயன்பாடு, அதை எத்தனை போ் வைத்துள்ளனா், விசா வைத்திருப்போா் செய்யும் வேலைகள், அவா்களின் பூா்விக நாடுகளின் பெயா், விசா முடிவடையும் தேதிகள் ஆகியவற்றை அரசு நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.