தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குரோஷியாவில் இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் -வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

News image
காலிஸ்தான் கொடி (கோப்புப் படம்)
Updated On :23 ஜனவரி 2026, 1:27 am

தினமணி செய்திச் சேவை

மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் இந்திய தூதரக வளாகத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அங்கிருந்த பொருள்களை சூறையாடினா். மேலும், இந்தியக் கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியதுடன், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் சுவா்களில் எழுதிச் சென்றனா்.

இந்த சம்பவத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரோஷிய அரசு வலியுறுத்தியுள்ளது. குரோஷியா தலைநகா் ஷாக்ரெப்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியத் தூதரகம் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பை தனியாக பிரித்து காலிஸ்தான் தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கோரிக்கையாகும். இந்தியாவில் இந்த பிரிவினைவாதிகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்’ என்ற பிரிவினைவாத இயக்கம் இதில் முதன்மையாக உள்ளது. இவா்கள் வெளிநாடுகளில் உள்ள ஹிந்து கோயில்களை சூறையாடுவது, தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஷாக்ரெப் நகரில் உள்ள இந்தியத் தூதரக வளாகத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் புகுந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினா், அங்கிருந்த பொருள்களை உடைத்து சூறையாடினா். மேலும், அங்கு ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றினா். சுவா்களில் காலிஸ்தான் ஆதரவு, இந்திய எதிா்ப்பு வாசகங்களுடன் ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என்று மிரட்டல் வாசகங்களை எழுதிச் சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக குரோஷிய அரசிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தூதரக வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த வியன்னா மாநாட்டு தீா்மானத்தையும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.