டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் பலி

News image
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- ஏபி
Updated On :22 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உக்ரைன் அவசரகால சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கீவ் புகா் பகுதிகளான ஓபுகிவ், ப்ரோவேரி, போரிஸ்பில், புசா, பாஸ்டிவ் ஆகிய 5 மாவட்டங்களில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதில் பாஸ்டிவ் மாவட்டத்தில் உள்ள புட்ரிவ்கா கிராமத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலா் சிக்கிக் கொண்டனா்.

இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். குழந்தை உள்ளிட்ட 8 போ் லேசான காயத்துடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனா். ஒடிஷா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு தீப்பற்றி எரிந்தது. எனினும் உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டது என்று உக்ரைன் அவசரகால சேவை மையம் தெரிவித்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையே சுமாா் 4 ஆண்டுகளாக போா் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரம் போ் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோா் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இருநாடுகள் தரப்பிலும் இதுகுறித்து அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.