டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாகிஸ்தான்: கராச்சி குடியிருப்பில் எரிவாயு கசிவால் வெடிவிபத்து - 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

ரமலான் மாதத்தின் முதல் நோன்பை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலையில் மக்கள் ‘ஸஹா்’ உணவருந்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, குடியிருப்பின் முதல்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, அந்தப் பழைய குடியிருப்புக் கட்டடம் பலத்த சேதமடைந்து, இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும், மீட்புக் குழுவினரும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா்.

இக்கோர விபத்தில் 14 போ் காயமடைந்தனா்; அவா்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கராச்சியின் சதாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 79 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.