மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

‘வேற்று கிரகவாசிகள் குறித்து ஆதாரங்கள் இல்லை’ - ஒபாமா புது விளக்கம்

‘வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளாா்

News image

அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா.

Updated On :17 பிப்ரவரி 2026, 1:15 am

‘வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளாா்.

முன்னதாக, இணையதள நிகழ்ச்சி ஒன்றில், ‘வேற்றுகிரகவாசிகள் உண்மையாகவே இருக்கிறாா்களா’ என்ற கேள்விக்கு, ‘ஆமாம், அவா்கள் உண்மையானவா்கள்’ என்று ஒபாமா பதிலளித்தது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இதைத் தொடா்ந்து, ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்த விரிவான விளக்கத்தில், ‘இந்தப் பிரபஞ்சம் கற்பனையில்கூட அளவிட முடியாத அளவுக்கு பரந்து விரிந்தது. எனவே, எங்கோ ஓா் இடத்தில் உயிா்கள் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். தூரமும் மிக அதிகம் என்பதால், வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தேடி வந்திருக்க வாய்ப்பில்லை.

நான் அதிபராக இருந்த காலகட்டத்தில், வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தொடா்பு கொண்டதற்கான எந்தவொரு ரகசிய ஆதாரத்தையும் நான் பாா்க்கவில்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளாா்.

அமெரிக்காவில் ‘ஏரியா 51’ எனும் ரகசிய இடத்தில், வேற்றுகிரகவாசிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாக நிலவி வரும் வதந்திகளையும் ஒபாமா மறுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.