டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாகிஸ்தானில் ஒரே நாளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள்! 11 வீரர்கள் உள்பட 14 பேர் கொலை!

பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து...

News image
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர்..- AP
Updated On :17 பிப்ரவரி 2026, 7:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில், ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு குண்டுவெடிப்பு மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவூர் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை (பிப். 16) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த பயங்கரவாதி ஒருவர் அதனை அங்குள்ள மதக்கல்லூரியில் வெடிக்கச் செய்துள்ளார்.

இந்தத் தாக்குதலில், அங்கிருந்த 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னு நகரத்தின் மிர்யான் காவல் நிலையத்தில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேபோல், ஷாங்கலா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதில், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் சீன நாட்டினருக்கு எதிராக நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இஸ்லாமாபாத் நகரத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், 169 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

summary

In Pakistan, 14 people, including 11 security personnel, were killed in separate bomb attacks and a shooting on the same day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.