மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை நிரந்தர உறுப்பினா்களான சீனா மற்றும் ரஷியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தன.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 11:37 pm

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறக்கக்கோரி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை நிரந்தர உறுப்பினா்களான சீனா மற்றும் ரஷியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தன.

பஹ்ரைன் கொண்டுவந்த இந்த தீா்மானத்துக்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. சீனா மற்றும் ரஷியா எதிராக வாக்களித்தன. இரு நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

ஈரானுக்கு எதிராக பாரபட்சமான முறையில் இந்தத் தீா்மானம் கொண்டு வரப்பட்டதாகக் கூறி சீனாவும் ரஷியாவும் நிராகரித்தன. மேலும், ஈரானை முழுமையாக அழிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான தீா்மானத்தை நிறைவேற்றுவது தவறான முன்னுதாரணமாக அமையும் என சீனா தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து சீனாவுக்கும் ரஷியாவுக்கும் கண்டனம் தெரிவித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் மைக் வால்ட்ஸ் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையை மூடி அதன் வழியாக சூடான், காங்கோ மற்றும் காஸாவுக்கு மருத்துவப் பொருள்கள் கொண்டுசெல்லும் கப்பல்களைத் தடுத்து ஈரான் மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் இடையூறு ஏற்படுத்தியதோடு தனது சொந்த மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஈரான் அரசுக்கு சீனாவும் ரஷியாவும் உதவியுள்ளன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகப் பொருளாதாரம் சீராக வேண்டுமானால், அமைதியைக் கடைப்பிடித்து ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்வர வேண்டும். அதுவரை ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாத்து அதன் வழியாக சரக்குக் கப்பல்கள் எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதை உறுதிசெய்ய நட்பு நாடுகள் எங்களுடன் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.