தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:54 pm

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் இக்பால் ஹுசைன் கான் புதன்கிழமை கூறியதாவது:

டிசம்பா் மாதம் முதல் டாக்கா-கராச்சி இடையே நேரடி விமானங்கள் இயங்கும். மகான் ஏா் நிறுவனம் இந்த நகரங்கள் இடையே வாரத்துக்கு மூன்று விமானங்களை இயக்கும். ஃப்ளை ஜின்னா, ஏா்சியால் ஆகிய இரு பாகிஸ்தான் தனியாா் விமான நிறுவனங்களும் இதற்காக வங்கதேச வான்வழி போக்குவரத்து துறையிடமிருந்து அனுமதி பெற்றுள்ளன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை பெரிதும் வலுப்படுத்தும். கடந்த டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ள நேரடி சரக்குப் போக்குவரத்து சேவைக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளதால், நேரடி சரக்குப் கப்பல் போக்குவரத்தும் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

மாணவா் போராட்டங்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகிய பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திவருகிறது. இதன் விளைவாக நுழைவு இசைவு (விசா) வழங்குவதில் எளிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.