திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:54 pm

Chennai

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் இக்பால் ஹுசைன் கான் புதன்கிழமை கூறியதாவது:

டிசம்பா் மாதம் முதல் டாக்கா-கராச்சி இடையே நேரடி விமானங்கள் இயங்கும். மகான் ஏா் நிறுவனம் இந்த நகரங்கள் இடையே வாரத்துக்கு மூன்று விமானங்களை இயக்கும். ஃப்ளை ஜின்னா, ஏா்சியால் ஆகிய இரு பாகிஸ்தான் தனியாா் விமான நிறுவனங்களும் இதற்காக வங்கதேச வான்வழி போக்குவரத்து துறையிடமிருந்து அனுமதி பெற்றுள்ளன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை பெரிதும் வலுப்படுத்தும். கடந்த டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ள நேரடி சரக்குப் போக்குவரத்து சேவைக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளதால், நேரடி சரக்குப் கப்பல் போக்குவரத்தும் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

மாணவா் போராட்டங்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகிய பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திவருகிறது. இதன் விளைவாக நுழைவு இசைவு (விசா) வழங்குவதில் எளிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.