பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று வேகமாகப் பரவு வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதியதாக மற்றொரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 18 மாத பெண் குழந்தை போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. நிகழாண்டு (2025) துவங்கியது முதல் அம்மாகாணத்தில் 7 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் 4 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் - பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலா 1 பாதிப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் 13 பேர் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், பாகிஸ்தானின் 7 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மூலம், வைல்ட் போலியோ வகை - 1 எனும் வைரஸ் பரவி வருவதாக, அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதையடுத்து, பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா மற்றும் சிந்து ஆகிய மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களின் கழிவுநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அந்த மாதிரிகளில் வைல்ட் போலியோ வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, உலகில் போலியோ வைரஸின் பாதிப்பானது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டும் தற்போது பரவலாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்நாடுகளில் போலி தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Another polio case in Pakistan, as 2025 tally climbs to 13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

எரிபொருள் நெருக்கடி! பாகிஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்!

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


