பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தானில் போலியோ தொற்று பரவுவதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 11:25 am

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று வேகமாகப் பரவு வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதியதாக மற்றொரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 18 மாத பெண் குழந்தை போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. நிகழாண்டு (2025) துவங்கியது முதல் அம்மாகாணத்தில் 7 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் 4 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் - பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலா 1 பாதிப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் 13 பேர் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், பாகிஸ்தானின் 7 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மூலம், வைல்ட் போலியோ வகை - 1 எனும் வைரஸ் பரவி வருவதாக, அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து, பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா மற்றும் சிந்து ஆகிய மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களின் கழிவுநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அந்த மாதிரிகளில் வைல்ட் போலியோ வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, உலகில் போலியோ வைரஸின் பாதிப்பானது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டும் தற்போது பரவலாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்நாடுகளில் போலி தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.