நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரிக்கை

News image
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்)- AP
Updated On :27 ஜூன் 2025, 6:54 am

DIN

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின் முடிவு குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. இந்த நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உக்ரைனுக்கு எதிராகப் போரிடப் போவதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

வடகொரியாவிடம் இருந்து, கூடுதல் படைகள் மற்றும் ஆயுதங்களையும் இறக்கி, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

உக்ரைனுடனான போரில் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக, முன்னரே வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர்களை ரஷியா களமிறக்கி இருந்தது.

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்த நிலையில், தற்போது ரஷியா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உக்ரைன் வீழ்த்தப்பட்டால், அது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்தால், உலகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உலகளாவிய அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உக்ரைன் ஆக்கிரமிப்பு குறித்து, முன்னதாகவே உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியிருந்தது. உக்ரைனின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டினிப்ரோ வழியாக உக்ரைனின் அனைத்து பகுதிகளையும், இந்தாண்டு இறுதிக்குள் ரஷியா ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டு காலமாக இடைவிடாத தாக்குதலை உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் ஆகியவை குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடா்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இருப்பினும், முடிவேதும் எட்டப்பட்டதுபோலத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.