இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜூன் 2025, 11:42 am

DIN

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த, இருதரப்புக்கும் இடையில் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையானது கடந்த சில மணி நேரங்களாகத் தீவிரமடைந்துள்ளதாக, ஹமாஸ் மூத்த தலைவர் தாஹெர் அல்-நுனு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

“போர்நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் எங்கள் சகோதரர்களான எகிப்து மற்றும் கத்தார் ஆகியோருடனான எங்களது தொடர்பு நிறுத்தப்படவில்லை, கடந்த சில மணிநேரங்களாக அது தீவிரமடைந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், போர்நிறுத்தத்துக்கான எந்தவொரு புதிய ஒப்பந்தத் திட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.