ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் சிந்து” எனும் மீட்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் மஷாத் நகரத்திலிருந்து இன்று (ஜூன் 24) அதிகாலை 3.30 மணியளவில் இயக்கப்பட்ட, அவசரகால சிறப்பு விமானம் மூலம் 292 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஈரானிலிருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையினால் இதுவரை 2,295 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி -17 ராணுவ விமனம் மூலம் இஸ்ரேலில் வசித்த 165 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு நிலம் எல்லை வழியாக அழைத்து வரப்பட்ட அவர்கள் அனைவரும், அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.
இத்துடன், இந்தியர்களை மீட்பதற்காக மட்டுமே கடந்த ஜூன் 20 ஆம் தேதி, ஈரான் அதன் வான்வழியைத் திறந்து மூன்று 3 சிறப்பு விமானங்களுக்கு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள்: ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்

ஈரானில் இருந்து ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக நாடு திரும்பிய 1,200 இந்தியர்கள்!
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள்... ஆர்மீனியாவுக்கு நன்றி: ஜெய்சங்கர்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


