திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஹாட் ஏர் பலூன்.

Updated On :22 ஜூன் 2025, 8:36 am

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் ஏர் பலூன் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். பைலட் உள்பட 13 பேர் படுகாயங்களுடன் உயர் பிழைத்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனே பலூனை பைலட் கீழே இறக்க முயன்றபோது பாதிக்கு மேற்பட்டோர் குதித்துத் தப்பியுள்ளனர். பயணிகள் கூடையில் தீப்பற்றவே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். ஒரு சோகம் நடந்துள்ளது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் பார்ப்போம். ஆனால் இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநில அமைப்பு தன்னால் முடிந்ததைச் செய்வதுதான்,” என்று சாண்டா கத்தரினாவின் ஆளுநர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து அனைத்து செயல்பாடுகளையும் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக ஹாட் ஏர் பலூன் நிறுவனமான சோப்ரேவோர் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.