ஈரானில் உள்ள குடிமக்களை மீட்கும் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கைக்கு நேபாள அரசு நன்றி தெரிவித்துள்ளது.
ஈரானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக 110 மாணவா்கள் மீட்கப்பட்டனா். ஈரானில் இருந்து நில எல்லை வழியாக ஆா்மீனியாவுக்கு வந்த மாணவா்கள் அந்நாட்டு தலைநகா் யெரெவானில் இருந்து கடந்த புதன்கிழமை விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா்.
ஈரானில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசிக்கின்றனா். இதில் பாதி போ் மாணவா்கள் ஆவா். ஈரானில் மருத்துவம், தொழில் படிப்புகளை அவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்தநிலையில், தொடர்ந்து இந்தியர்களை அங்கிருந்து தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசுகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, ஈரானில் சிக்கியுள்ள அந்நாட்டு குடிமக்களையும் இந்தியா மீட்டு அழைத்து வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவுக்கு நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஆர்ஸு ராணா தேபா கூறியிருப்பதாவது; “ஈரானிலிருந்து நேபாள நாட்டினரை வெளியேற்றும் பணிகளில் உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியாவுக்கு நன்றி. இதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
நேபாளம் - இந்தியா உறவுகளை வலிமையை பிரதிபலிக்குமொரு நடவடிக்கையாக இந்தியாவின் இந்த உதவி நடவடிக்கை அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
சிம்லாவில் 9.28 கிலோ போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


