தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜெர்மனி யூதர்களை உளவு பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!

ஜெர்மனியில் ஈரானுக்காக தகவல் சேகரித்த ஒருவர் டென்மார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2025, 11:12 am

ஈரான் உளவுத் துறைக்காக ஜெர்மனி நாட்டிலுள்ள யூதர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டென்மார்க் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அலி எஸ், எனும் நபர் ஒருவர் ஈரானின் உளவுத் துறைக்காக, ஜெர்மனி தலைநகர் பெர்லினிலுள்ள யூதக் குடியிருப்புகள் மற்றும் யூதர்களைக் குறித்த தகவல்களைச் சேகரித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் அந்தத் தகவல்களின் மூலம் பெர்லினிலுள்ள யூதர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுவதால், ஜெர்மனியின் உள்நாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் டென்மார்க் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில், டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் டென்மார்க்கிலிருந்து ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்த விரிவான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 3 பேருக்கு கடந்த ஜூன் 25 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.