ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மீண்டும் வட கொரியா எறிகணை சோதனை: தென் கொரியா குற்றச்சாட்டு

இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்கு அருகே வட கொரியா மீண்டும் எறிகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 

News image

வட கொரியா எறிகணை சோதனை

Updated On :6 ஜனவரி 2024, 12:00 pm

இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்கு அருகே வட கொரியா மீண்டும் எறிகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 

தங்கள் எல்லையையொட்டி வட கொரியா வீசிய நூற்றுக்கணக்கான எறிகணைகளுக்குப் பதிலடியாக, தென் கொரியாவும் வெள்ளிக்கிழமை எறிகணைவீச்சில் ஈடுபட்ட நிலையில், இன்று மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை வடகொரியா நடத்தியிருப்பது, கொரிய கடற்பரப்பில் போர் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், தென் கொரியாவின் மேற்கு கடல் எல்லையையொட்டி, வட கொரியா சுமாா் 200 எறிகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டது. இது, பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயலாகும் என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சுமாா் ஓராண்டுக்குப் பிறகு, இத்தகைய எறிகணை சோதனையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வட கொரியா ஈடுபட்டுள்ளது

வட கொரியாவின் இந்த சோதனைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, தென் கொரியாவும் இரண்டு எல்லைத் தீவுகளில் இருந்தபடி வட கொரிய எல்லை அருகே எறிகணைகளை சரிமாரியாக கடலுக்குள் வீசி சோதித்தது.

எனினும், இந்தச் சோதனை தொடா்பாக வட கொரியா இதுவரை எந்தக் கருத்தையும் வெளிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.