15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் காணவில்லை!

ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது..

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 10:16 am

கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷி ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலைக்கு அருகிலுள்ள தளத்திலிருந்து புறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானியிடம் இருந்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் இருந்ததாகவும், ஹெலிகாப்டர் கிழக்கு கட்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது.

ரஷிய ஹெலிகாப்டர் காணாமல் போன பகுதியில் தூறல் மற்றும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை தேட மற்றொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 12-ம் தேதி 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகாப்டர் ரஷியாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.