கராச்சி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இன்று காலை பேருந்தில் வந்த 23 பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, பலோசிஸ்தானில், தனிநபர்களின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
பேருந்தில் வந்தவர்களை கீழே இறக்கி, அடையாளத்தை உறுதிசெய்துகொண்ட பிறகு, பயங்கரவாதிகள் அவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் பயங்கரவாதிகளை தேடும் பணியும் நடந்து வருகிறது.
பலோசிஸ்தானின் முசாகேல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. பேருந்து செல்லும் பாதையில் காற்களை அடுக்கி, பேருந்து வழியில்லாமல் சாலையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், பேருந்துக்குள் ஏறி, துப்பாக்கி முனையில் அனைவரின் அடையாளங்களையும் பரிசோதித்துவிட்டு, அவர்களை பேருந்திலிருந்து கீழே இறக்கி சுட்டுக்கொன்றுள்ளார்.
அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - AP
பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபர் அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த 12 வாகனங்கள் மீது தீ வைத்துச் சென்றதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்தனர்.
இதற்கிடையே, கலாட் மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நெடுஞ்சாலையில் சென்ற தனிநபர்களின் வாகனங்களை நோக்கி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 4 காவலர்களும், 5 பொதுமக்களும் அடங்குவர்.
பயங்கரவாதிகள், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றுள்ளனர். ஏற்கனவே, மஸ்துங் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது, காவல்நிலையம் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் தற்போது பயங்கரவாத தாக்குதல் அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



