ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கரோனா அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.. சொல்கிறது சீனா

கரோனா அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும், அந்நாட்டு அரசு, கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கரோனா அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.. சொல்கிறது சீனா

Updated On :27 ஜனவரி 2023, 10:55 am

பெய்ஜிங்: கரோனா அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும், அந்நாட்டு அரசு, நாள்தோறும் புதிய பாதிப்பு மற்றும் மருத்துவமனைகளில் கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சுகாதாரத் துறை நிபுணர்கள் தரப்பிலோ, நிலவரமும், அந்நாட்டு அரசு அளிக்கும் புள்ளிவிவரமும் வேறுபடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், நாட்டில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஜனவரி முதல் வாரத்தில் உச்சத்தைத் தொட்டதாகவும், அதன்பிறகு பாதிப்பு குறைந்து வருவதாகவும் தற்போது 70 சதவீதமாகக் குறைட்நதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வாரத்தில் கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக இருந்ததாகவும், அதன்பிறகு குறைந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு உச்ச நிலையைக் கடந்துவிட்டதாகவும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான சர்வதேச வல்லுநர்களோ, சீனாவின் புள்ளிவிவரங்கள் மிகவும் நம்பமுடியாதவை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.