ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தாவூத் இப்ராஹிம் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மருமகன்

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

News image

தாவூத் இப்ராஹிம் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மருமகன்

Updated On :17 ஜனவரி 2023, 10:12 am

மும்பை: தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பிடம், தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன் அலிஷா பார்கர், அளித்திருக்கும் பல்வேறு தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, மைஸாபின் என்பவருடன் தாவூத் இப்ராஹிமுக்கு திருமணமான நிலையில், பாகிஸ்தானின் பதான் சமூகத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிமின் முதல் மனைவியும் வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம், தொடர்ந்து குடும்பத்தினருடன் பேசி வரும் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் மற்றொரு பாதுகாப்பான இடத்துக்கு தாவூத் இப்ராஹிம் குடிபெயர்ந்து விட்டதையும்ட அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.