இந்நிலையில், ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 பிரான்ஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினா். பிரான்ஸ் விதிமுறைகளின்படி, அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணியை விசாரணைக்காக பிரான்ஸ் எல்லை காவல் படை 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கலாம். அந்தக் காவலை முதலில் 8 நாள்களும், பின்னா் தேவைப்பட்டால் கூடுதலாக 8 நாள்களும் நீட்டிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உள்ளது. இந்த நிலையில், பயணிகளிடம் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகளுக்கு 2 நாள்கள் அவகாசம் உள்ளது. அவா்களின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர்.