நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மன்னர் பதவியேற்பில் கோஹினூர் மகுடத்தை அணிவாரா கமிலா?

பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கும் விழா நடைபெறவிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மன்னர் பதவியேற்பில் கோஹினூர் மகுடத்தை அணிவாரா கமிலா?

Updated On :17 அக்டோபர் 2022, 12:51 pm


லண்டன்: வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கும் விழா நடைபெறவிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில், பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ராணி கன்சார்ட் கமிலா கோஹினூர் வைரம் பதித்த மகுடத்தை அணிந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் ஆங்கில ஊடகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், மிகவும் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பதித்த மகுடத்தை கமிலா அணியக் கூடாது என்றும், அது சர்வதேச அளவில் கொந்தளிப்பைக் கூட ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் அளித்த பேட்டியிலும், மன்னர் பதவியேற்பு விழாவில் கோஹினூர் வைரம் பதித்த மகுடத்தைக் காண வாய்ப்பில்லை என்றே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கோஹினூர் மகுடம், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் மூச்சு பிரியும் வரை அவரிடமே இருந்தது. அதற்குப் பிறகு வழக்கமாக, அடுத்த ராணியான கமிலாவிடம் அது ஒப்படைக்கப்படுகிறது.

இன்று இத்தனை கேள்விகளுக்கு உள்ளாகும் அந்த மகுடத்தை, 1937ஆம் ஆண்டு மன்னார் ஆறாம் ஜார்ஜ் பதவியேற்றபோது, ராணி எலிசபெத்தின் தாய் அதனை அணிந்திருந்தார் என்று வரலாறுகள் சொல்கின்றன.

அந்த கோஹினூர் வைரம் 105.6 காரட் எடைகொண்ட உலகிலேயே மிகவும் பொக்கிஷமாக வைரமாகப் பார்க்கப்படுகிறது. இது 14ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.