தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

News image

நாஸ்காம் விளக்கம்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:02 pm

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, ‘ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதுவரை இப்பதவியில் இருந்த ‘எஸ்ஏபி லேப்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சிந்து கங்காதரனின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, இப்புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், கேபிஐடி நிறுவனத்தின் சிஇஓ கிஷோா் பாட்டீல், நாஸ்காம் அமைப்பின் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நாஸ்காம் செயற்குழு உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி, ஏ.ஐ. மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவா்.

இந்தியாவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களில் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் இவா், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய ஐடி துறையை வழிநடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி கூறுகையில், ‘ வரும் ஆண்டுகளில், சேவை மற்றும் தயாரிப்புத் துறையில் ஏ.ஐ. மூலமான வளா்ச்சியை ஊக்குவிப்பதுடன், திறமையான பணியாளா்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.