நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

உலக மக்கள்தொகை 800 கோடி

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை செவ்வாய்க்கிழமை (நவ. 15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:51 am

DIN

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை செவ்வாய்க்கிழமை (நவ. 15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் வசித்து வரும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்எஃப்பிஏ) தெரிவித்துள்ளது. கடந்த நூற்றாண்டில் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது.

உலக மக்கள்தொகை 2037-ஆம் ஆண்டில் 900 கோடியையும், 2058-ஆம் ஆண்டில் 1,000 கோடியையும் எட்டும் என ஐ.நா. அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் 142.6 கோடி பேரைக் கொண்டு சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 141.2 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2023-ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியாவில் மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சராசரி கருவுருதல் விகிதம் 2.2-லிருந்து 2-ஆக குறைந்துள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலையான கருவுருதல் விகிதமான 2.1 என்ற நிலையை அடைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன குடும்ப கட்டுப்பாட்டு நடைமுறைகளே இந்தியாவில் கருவுருதல் விகிதம் குறைந்ததற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை கடந்து வந்த பாதை

200 கோடி 1927

300 கோடி 1960

400 கோடி 1974

500 கோடி 1987

600 கோடி 1999

700 கோடி 2011

800 கோடி 2022

700-லிருந்து 800 கோடியில் முக்கியப் பங்களிப்பு

இந்தியா 17.7 கோடி

சீனா 7.3 கோடி

2050-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணிப்பு

இந்தியா 166.8 கோடி

சீனா 131.7 கோடி

உலகம் 950 கோடி

மக்களின் சராசரி வயது

இந்தியா 28.7

சீனா 38.4

ஜப்பான் 48.6

உலக அளவில் 30.3

உலக மக்களின் சராசரி ஆயுள் காலம்

1990 64

2019 72.8

2050 77.2 (கணிப்பு)

உலக மக்கள்தொகையில் முதியோா்

2022 10%

2050 16%

இந்திய மக்கள்தொகை

15 முதல் 64 வயது 68%

65+ 7%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.